கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக, ஓலா நிறுவனம் அதன் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது நான்காவது முறையாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பல நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரை தலைமை இடமாக கொண்ட ஓலா நிறுவனம் கடந்த 2 மாதங்களில் 95 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஓலா நிறுவனம் அதன் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.